ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் கேரளா அணியில் அல்வரோ 42-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் கேரளா அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர் அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.