Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : டிராவில் முடிந்தது ஒடிசா VS கோவா ஆட்டம் ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஒடிசா – கோவா அணிகளுக்கிடையேயான  ஆட்டம் டிராவில் முடிந்தது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி  போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் ஒடிசா – கோவா அணிகள் மோதின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் 42-வது நிமிடத்தில் கோவா அணியில் இவன் காரிடோ முதல் கோல் அடித்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 53- வது நிமிடத்தில் ஒடிசா அணியில் ஜோனதாஸ் டி ஜீசஸ் கோல் அடித்தார் .இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தது. இதன் பிறகு நடந்த 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்  அடிக்கவில்லை.இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

Categories

Tech |