ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது .இதன்மூலம் ஜாம்ஷெட்பூர் அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது .இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- கோவா அணிகள் மோதுகின்றன.