Categories
சினிமா தமிழ் சினிமா

தில்லுக்கு துட்டு 3 உருவாகிறதா..? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சந்தானம்….!!!

தில்லுக்கு துட்டு 3 குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஓடிடி வெளியாகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் தில்லுக்கு துட்டு மூன்றாம் படம் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு3 உருவாகி வருகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சர்வர் சுந்தரம் படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சந்தானம் சர்வர் சுந்தரம் திரைப்படம் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |