வாழைப்பழம்!!
முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம். கருதப்படுகிறது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள்களை வாழை இலை இல்லையுல் படைக்கிறோம்தினமும் வாழை இலையில் உள்ள உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும் ,மந்தம் , இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.
வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல் புண் ரத்தபேதி மூல நோய் ஆகியவை குணமாகும்.
வாழைத்தண்டு சாற்றுக்கு நீரை பெருக்கும் தன்மை உண்டு எனவே இதை நீர்ச் சுருக்கு ,எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும் இதை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும் கல்லீரல் வலுவடையும்.
வாழைப்பிஞ்சுக்கு ரத்த மூலம், ரத்த கடுப்பு ,வயிற்றுப்புண், நீரிழிவு நோய், நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் வயிற்று உளைச்சல் ,உடல் வெப்பம் ,இருமல் ,தணியும்.
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது உடல் தோல் பளபளப்பாகும் பெண்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.
வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும். இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும் வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.