Categories
உலக செய்திகள்

2 மாத விண்வெளியில் ஆய்வு…. பூமி திரும்பிய நாசா வீரர்கள்….!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலமாக விண்வெளி வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகிய இருவரும் அங்கிருந்து புதிய க்ரூ டிராகனில் சென்ற சனிக்கிழமை அன்று பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.

பின்னர் 21 மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் நேற்று அதிகாலை மெக்சிகோவின் வளைகுடா கடல் பகுதியில் தரை இறங்கினார்கள். 17,500 மைல் வேகத்தில் வந்த பாராசூட் படிப்படியாக 15 மைல் வேகத்திற்கு குறைந்தது. டிராகன் பாராசூட் தரை இறங்கியதும் அங்கிருந்து படகு மூலமாக கடற்கரைக்கு அழைத்து வரப்பட்ட விண்வெளி வீரர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் குடும்பத்தினரை சந்திப்பதற்கு வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Categories

Tech |