திண்டுக்கல் அருகே பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் திவ்யபாரதியின் கணவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் அவர் யாரால் வெட்டி கொல்லப் பட்டார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.