நேற்று நடந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில், 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார் .
நேற்று மும்பையில் நடந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் , 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ,இந்த ஓவரின் கடைசி பந்தை தீபக் சாஹர் வீச ,அதை சிக்ஸருக்கு தூக்கி வீசினார்.
இதனால் 200 சிக்சர் வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் சுரேஷ் ரெய்னா. இதைத்தொடர்ந்து ஐபில் போட்டிகளில் ,அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மா 222 சிக்ஸர், எம்எஸ் தோனி 217 சிக்ஸர் மற்றும் விராட் கோலி 204 சிக்ஸர் எடுத்து , பட்டியலில் இடம் பெற்றுள்ளன.