அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலநீட்டிப்பு கேட்கப் போவதாக விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவியில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசனை விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் அந்த விசாரணையில் நிதி முறைகேடு, நியமன முறைகேடு உள்ளிட்ட சரியான தகவல்களை மூன்று மாதத்திற்குள் விசாரணை செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் விசாரணை காலம் வரும் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு தெரிவித்ததாவது, சூரப்பா மீது எப்போதும் புகார்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது.
அவர் மீது புகார் அளித்தவரையும் விசாரணை செய்து விட்டோம். ஆனால் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை பல்கலைக் கழகத்திடம் இருந்து வாங்குவதற்கு காலதாமதம் ஆகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாஅங்கு தொடர்ந்து இருந்து வருவது ஆவணங்களையும் பெறுவது சிரமமாக உள்ளது. சூரப்பாவின் மகள் பல்கலை கழகத்தின் 7 மாதங்களாக பணிபுரிந்துள்ளார். ஆனால் அதற்கான எந்த விதமாக நாங்களும் அங்கு இல்லை.
ஆகையால் நியமனங்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். தற்போது வரை கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்கலாமா, அல்லது காலநீட்டிப்பு பெற்று துணைவேந்தர் உள்ளிட்ட அலுவலர்களை விசாரித்த பின் சமர்ப்பிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை. ஆகையால் விசாரணைக்கு கால நீட்டிப்பு அனுமதி பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.