Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்… முன்பகையால் வந்த விளைவு… தந்தை மகனை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொட்டியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(26) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் சுப்பிரமணி(58) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் அவரது மனைவி பொடியம்மாள் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் இணைந்து சங்கர் சுப்பிரமணியின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அப்போது சுப்பிரமணி மற்றும் அவரது மகன் பலகுமாரை(24) தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையுயம் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து முருகன் போடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி முருகன் மற்றும் அவரது மகன் மணிகண்டனை கைது செய்த நிலையில் பொட்டியம்மாளை தேடி வருகின்றனர்.

Categories

Tech |