பாலிவுட்டில் ஏ.ஆர் ரகுமானின் வாய்ப்புகள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஸ்ருதிகாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் தனிமையான நாட்களை இசையால் நிரப்பியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த 100 நாட்களில் எட்ஜ் என்ற ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். முதல் ஒரிஜினல் டிராக் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ” இந்த ஊரடங்கு நாட்களில் ஏதாவது கிரியேட்டிவிட்டி ஆக வித்தியாசமாக செய்ய நினைத்தேன். எட்ஸ் பாடல் என் மனதில் இருந்து தோன்றியது. என்னை நானே எப்படி பார்ப்பது, எப்படி நேசிப்பது என்ற கேள்விகளுக்கு உரியது.
அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமாக இல்லை. எதையேனும் இழந்துவிடுவோமோ என ஏதோ ஒரு பயத்தில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறோம். அவற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டோம். இது எல்லாம் அப்பாடலில் உள்ளது.” எனக்கூறி அவரின் பாடலை பியானோவில் வாசித்து உருவாக்கியுள்ளார்.” சிறுவயதிலேயே இசை மீதான ஆர்வத்தை கண்டு கொண்டேன். சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாவும் நீயே என்ற பாடலை பாடினேன்.
அதுதான் என் முதல் பாடல் அனுபவம். 80 ஆயிரம் பேருக்கு மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்தது. புதியவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய அத்தருணத்தில் இருந்து இசை என் வாழ்க்கைக்குள் வந்துவிட்டது.” என ஆர்வத்துடன் பகிர்ந்துள்ளார். பாலிவுட் பற்றிய ஏ ஆர் ரகுமானின் விமர்சனத்திற்கு பதில் அளித்த ஸ்ருதிகாசன்” இந்தியர்களில் ரகுமான் சார் மிகவும் பிரபலமானவர். வெளிநாட்டவர்கள் இந்தியர்களை வடக்கு தெற்கு மத்திய இந்தியா என பார்ப்பதில்லை. நாம் அனைவரும் அவர்களுக்கு அதிர்ந்து பேசும் வண்ணமயமான, சுவாரஸ்யமான தோற்றம் கொண்ட இந்தியர்கள். இந்தியாவிற்குள் தான் இந்தப் பிரிவினைகள் உள்ளது. அப்படி நினைக்காத நன்கு படித்த விழிப்புணர்வு கொண்ட பலர் மும்பையில் உள்ளார்கள்” என தன் மனதில் தோன்றிய கருத்தினை நடிகை ஸ்ருதிஹாசன் முன்வைத்துள்ளார்.