இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின் முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பிரேசில் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.