Categories
தேசிய செய்திகள்

”ககன்யான் திட்டத்திற்கு முக்கியத்துவம்” இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி…!!

நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் .

கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்  விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நேற்றோடு முடிவடைந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ_வின் தலைவர் சிவன் கூறுகையில்,

நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை சுற்றி வரும்  ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாகவும் , அதில் உள்ள எட்டு கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நமது விஞ்ஞானிகள் முக்கியத்துவம் கொடுத்து உழைத்து வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |