Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… தீவிர ரோந்து பணி.. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நால்ரோடு, ஆம்பூர்பட்டி, ஆவூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  7 பேரிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர் .

Categories

Tech |