Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எப்படி சிக்குச்சின்னு தெரியல… வவ்வாலுக்கு நேர்ந்த சோகம்… மின்தடையால் மலைப்பகுதி மக்கள் அவதி…!!

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மலை கிராம பகுதியில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைப்பகுதியில் அத்திப் பழம் சீசன் அமோகமாக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அத்திப்பழங்களை என்பதற்காகவே வவ்வால்கள் அதிக அளவு மலைப் பகுதிக்கு வந்து மின் வயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விடுகிறது. இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக மலை கிராமப் பகுதியில் மின்சாரம் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பிறகு இறந்த நிலையில் மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருந்த வவ்வால்களை அகற்றி விட்டு சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்வாரிய துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |