Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இது 90% செயல்படுமாம்…. ஒப்புதல் அளித்த இந்திய மருத்துவ நிறுவனம்….!!

கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடிய மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடியதாகவும், 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தக்கூடியதாகவும், 2 டேஸ் முறையைக் கொண்டதாகவும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி திகழ்கிறது. இந்நிலையில் இதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் சிப்லா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி சிப்லா நிறுவனம் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, அதனை மொத்தமாக இந்திய மத்திய அரசாங்கத்திற்கு விற்பனை செய்யவுள்ளது. இதனையடுத்து மத்திய அரசாங்கம் இந்த கொரோனா தடுப்பூசிகளை ஜூலை 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |