மனைவி ஒருவர் கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வசிக்கும் தம்பதிகள் அரவிந்த் – சிவகுமாரி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே எப்போதும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களின் பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவதை வழக்கமாக இருந்தது. இதேபோல் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.
தினமும் வேலைக்கு சென்று வீட்டிற்கு தாமதமாக வருவதால் கணவனிடம் சிவகுமாரி தகராறு செய்துள்ளார். இதனால் இவருக்கு இருவருக்கும் பயங்கரமான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த மனைவி காலை 5 மணிக்கு சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்யை தூங்கிக்கொண்டிருந்த தன் கணவன் முகத்தில் ஊற்றியுள்ளார். எனவே அரவிந்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அரவிந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முகத்தில் எண்ணெய் ஊற்றியதில் அரவிந்த் படுகாயமடைந்துள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கோபத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.