மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் இந்திராநகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜா என்ற மகன் இருக்கின்றார். இவர் சிவகிரியில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ராஜா வேலைக்காக சென்று தனது நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
அதன் பிறகு ராஜா வேலையை முடித்து வெளியே சென்று பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து ராஜா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.