Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் செல்லும் பிரிட்டன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டிற்கு பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே பிரிட்டன் அரசு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிரிட்டன் மக்கள்  பிரான்ஸ் நாட்டிற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள்ளாக PCR சோதனை செய்து அதில் தொற்று இல்லை என்று முடிவுகளை காட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான மாநில செயலாளரான Clément Beaune, என்பவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனில் தற்போது கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே செம்மஞ்சள் பட்டியலில் பிரிட்டன் இருக்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், கொரோனா பாஸ் வைத்திருக்காதவர்கள் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட PCR சோதனை முடிவுகள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |