மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்ச் 6-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதியது .
இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 244 ரன்கள் குவித்தது.இதில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 114 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் பிறகு 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வோல்வார்ட் 85 ரன்கள் எடுத்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.