தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2: 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது..
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
தென்னாப்பிரிக்க அணியில் மஹராஜ், பார்னெல் மற்றும் ரபாடா ஆகியோர் நீக்கப்பட்டு லுங்கி இங்கிடி, பெஹ்லுக்வாயோ மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் கொண்டு வரப்பட்டனர். டெம்பா பவுமாவும் தப்ரைஸ் ஷம்சியும் நன்றாக இருக்கிறார்கள், ஆனால் முன்னெச்சரிக்கையாக விலக்கப்பட்டுள்ளனர். கேசவ் மகராஜ் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜன்னிமன் மலன் 15 மற்றும் குயிண்டன் டிகாக் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்பரன்களுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர்.
முக்கிய வீரர்களான எய்டன் மார்க்ரம் 9, கேப்டன் டேவிட் மில்லர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி நடையை கட்டினர். அதிகபட்சமாக ஹென்றி கிளாசன் மட்டுமே 34 ரன்கள் எடுத்தார்.. மற்றபடி யாருமே பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.. இறுதியில் தென்னாபிரிக்கா அணி 27. 1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களுக்கு சுருண்டது. ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைந்த இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஷிகர் தவான் 8 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் சிறப்பாக ஆடினார். அதனைத் தொடர்ந்து வந்த இசான் கிசான் 10 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின் ஷ்ரேயஸ் ஐயர் – கில் இருவரும் இணைந்து ஆடிய நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 49 (57) ரன்கள் எடுத்தபோது துரதிர்ஷ்டவசமாக இங்கிடி பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார்.. அதன்பின் சாம்சன் உள்ளே வந்தார்.
இறுதியில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட சிக்சருடன் முடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்.. இந்திய அணி 19.1 ஓவரில் 105 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஷ்ரேயஸ் 28 ரன்களுடனும், சாம்சன் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் 2:1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
India complete a thumping win to seal a 2-1 series victory 👏🏻#INDvSA | 📝 Scorecard: https://t.co/YRwvpvvKyQ pic.twitter.com/blRiLcmNLd
— ICC (@ICC) October 11, 2022