இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் சோப்ரா ஆர்ச்சர் காயம் ஏற்பட்ட காரணத்தால் விலகியுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார்.
அவருக்கு காயம் அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், அதன்பின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து சோப்ரா ஆர்ச்சர் விலகுவது இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றனர்.