எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதியான வி.ஆர்.சௌத்ரி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி இன்று முதல் எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி வரை அவர் அந்த நாட்டில் இருப்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் விமானப்படைத் திறன் மாநாடு மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் அவர் பங்கேற்றார். அந்த மாநாட்டில் புதிய மற்றும் முறைசாராத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விமானப் படைகளின் கூட்டணி என்ற தலைப்பில் தளபதி வி.ஆர்.சௌத்ரி இன்று உரையாற்றினார். இவ்வாறு எகிப்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இருநாட்டு ராணுவப் படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.