இந்தியாவில் இன்று முதல் பப்ஜி செயலிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
அண்டை நாடான சீனாவுடனான பிரச்சனைக்கு பின்னர் அந்த நாட்டின் டிக் டாக், ஷேர்இட், உள்ளிட்ட மொபைல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி உள்ளிட்டவற்றிற்கும் மத்திய அரசு தடை விதித்தது.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அதை முற்றிலும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பப்ஜி செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் அதை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.