Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது.

இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த கோர விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்தியரான அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தான் கனடாவிற்கு சென்றிருக்கிறார். தற்போது அவரின் உடல் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |