Categories
தேசிய செய்திகள்

”வேட்டையாடிய இந்திய ராணுவம்” 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |