Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியான…. பிரபல நாட்டு பெண் மந்திரி பதவி விலகல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக  பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ். இவர் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 42 ஆகிறது. இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென்.

இது குறித்த அவர் கூறியதாவது, “நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி அவர் மந்திரி பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். இருப்பினும் பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன்” என அவர் கூறியுள்ளார். கடந்த 14-ஆம் தேதி நிதி மந்திரி பதவியிலிருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

இதனை அடுத்து ஒரு வாரத்திற்குள் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியிலிருந்து விலகி சென்றுள்ளார். இந்த அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையிலிருந்து பெண் மந்திரி வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிகளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.

இந்த சர்வதேச மாணவர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். அதனால், இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சின் அரசிலுள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் புலம்பெயர்வோரை குறைக்கும் தங்களது நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும் பிரேவர்மேன் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வேலை தேடி செல்வது பாதிக்கப்பட கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றி அவர் கூறியதாவது, “குறிப்பிட்டு சமீபத்தில் அவர்  விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும்  எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்துவிடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்திய தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் எதிர்வினையாற்றியது. இந்நிலையில், பிரேவர்மேன் அப்படியே பல்டி அடித்து, இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனை அடுத்து தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது, “இந்திய வம்சாவளி மக்களாால் இங்கிலாந்து நாட்டின் வளம் பெருகியுள்ளது.

இந்திய சமூக உறுப்பினராக நான் இருப்பது பெருமைக்குரிய விசயம். இங்குள்ள கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை, தங்கியுள்ள இந்தியர்கள் நாட்டை அலங்கரித்துள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா, இங்கிலாந்து இடையேயான நட்புறவை மேலும் ஆழப்படுத்த மற்றும் இரு நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன. மேலும் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் செயல்படும்” என்று கூறினார். இந்த சூழலில் அமைச்சரவையிலிருந்து பதவி விலகும் முடிவை அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |