Categories
தேசிய செய்திகள்

“அத்து மீறி தாக்கிய பாகிஸ்தான்’ 3 வீரர்களை சுட்டு கொன்ற இந்தியா.!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி  தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர்.  

இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் பாகிஸ்தான் எல்லையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for Uri and Rajouri sectors indian army

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரும் திருப்பி பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய பாதுகாப்பு படையினர் அதிரடியாக பாகிஸ்தான் வீரர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.

Categories

Tech |