Categories
உலக செய்திகள்

போரை உடனே நிறுத்துங்கள்…. இந்தியா-பிரான்ஸ் இணைந்து கூட்டறிக்கை…!!!

உக்ரைனை எதிர்த்து ரஷ்யா மேற்கொள்ளும் போர் தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 2 நாடுகளின் நலன்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பது தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான பிரச்சனைக்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளன. உடனே உக்ரைனில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும். மக்கள் பாதிப்படைவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |