Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

இந்து கோயிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் …!!

காரைக்காலில் இந்து கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திரு. அப்துல் காதர் இவர் கிலாசாக் குடியில் விவசாய நிலம் வாங்கியுள்ளார். கீழக்காசாக் குடியில் பழங்காலத்திலிருந்தே ஒரு பனை மரமும் ஒரு சூழமும் வைத்து ஒத்தை பனை மர முனீஸ்வரர் என்று அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இடத்தை வாங்கிய பின்பு அங்கு பொதுமக்கள் வழிபாடு செய்வதே தெரியாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு முடிவு செய்து அங்கு சென்று பார்த்த பொழுது அங்குள்ள மக்கள் இக்கோவிலுக்கு வந்து பக்தியுடன் வழிபாடு செய்வது தெரிய வந்தது. அந்த கிராம மக்கள் அவரிடம் கேட்டுக் கொண்டதையடுத்து இஸ்லாமியரான திரு. அப்துல் காதர் தனக்கு சொந்தமான அந்த நிலத்தை கோவிலுக்கு இனாமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

Categories

Tech |