Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND Vs WI : சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா…. தட்டி தூக்கிய இந்திய அணி….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலாவதாக களமிறங்கிய விராட் கோலி 0 ( 2 ), கேப்டன் ரோஹித் சர்மா 13 ( 15 ) இருவரும் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். இதனால் 16/2 என ஸ்கோர் மாறியது. அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டம் இழந்தது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டம் இழந்துள்ளனர்.

இதனால் கோலியையும், ரோஹித்தையும் ஒரே ஓவரில் இரண்டு முறை வீழ்த்திய பவுலராக அல்ஜாரி ஜோசப் உள்ளார். இதையடுத்து களமிறங்கிய ஷிகர் தவன் 10 ( 26 ) ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார். பின்னர் ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 100 ரன்களை கடந்து நீடித்தனர். இந்த நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 80 ( 111 ), ரிஷப் பந்த் 56 ( 54 ) இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

அதனை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 6 ( 7 ) பெரிய ஸ்கோர் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து தீபக் சஹார் 38 ( 38 ), வாஷிங்டன் சுந்தர் 33 ( 34 ) இருவரும் ஓரளவு ரன்களை குவித்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 265/10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் ஜேசன் ஹோல்டர் இறுதியாக 4 விக்கெட்டுகளை கைபற்றி 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் 34 ( 39 ), ஓடியின் ஸ்மித் 36 ( 18 ) இருவரும் பெரிய ஸ்கோர்கள் அடித்தார்கள். இருப்பினும் 37.1 ஓவர்கள் முடிவில் 169/10 ரன்கள் மட்டுமே அடித்து 96 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா இந்திய அணிக்காக முதல் 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Categories

Tech |