இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த 2-வது போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய 4-வது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் உடனடியாக அவருக்கு களத்தில் மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர்.
இதைதொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பிசிசிஐ மருத்துவக் குழு இஷானை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS – Ishan Kishan ruled out of 3rd T20I.
More details here – https://t.co/QVWZ4CFCv5 @Paytm #INDvSL pic.twitter.com/CN1a2GVLQa
— BCCI (@BCCI) February 27, 2022