இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது . இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர் என 89 ரன்கள் குவித்தார். இதையடுத்து ரோகித் சர்மா 44 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும் குவித்தனர்.இதன்பிறகு 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கத்திலேயே தடுமாறியது. இதனால் 60 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தடுமாறியது.இறுதியாக இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அசலங்கா 53 ரன்னும் , சமீரா 24 ரன்னும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நாளை (26-ம் தேதி) தரம்சாலாவில் நடைபெறுகிறது.