இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார் .
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் .இதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எம்.எஸ்.தோனி குறைந்த இன்னிங்சில் 100 விக்கெட் கைப்பற்றினார் .
குறிப்பாக எம்.எஸ்.தோனி தனது 36 டெஸ்ட் போட்டியில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 பேரை ஆட்டமிழக்கச் செய்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இதில் தென்னாப்பிரிக்காவின்டெம்பா பவுமாவை , ரிஷப் பண்ட் அவுட் செய்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.