Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA செஞ்சூரியன் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …..! ராகுல் காந்தி வாழ்த்து ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 62.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 197 ரன்னில் சுருண்டது. இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .ஆனால் தென்னாபிரிக்க அணியின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 62.3 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதன் பிறகு 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இறுதியாக 10 விக்கெட் இழப்பிற்கு 192 சுருண்டது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |