கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டிருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதனால் அந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆனது தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை வரை நிலவர நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆனது வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 16 கண் மதாகுகள் வழியாக வினாடிக்கு 50,000 கன அடி வீதம் தண்ணீர் ஆனது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.