Categories
மாநில செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட பங்களா… நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை…!!

சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அந்த நிலத்தில் வருமான வரித்துறையால் ஒட்டப்பட்டிருக்கும் நோட்டீசில், 22,460 சதுர அடி உள்ள இந்த நிலம் குறித்த ஆதாரங்களை 90 நாட்களுக்குள்  ஒப்படைக்குமாறு இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்தை  வேறு யாரும் வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம்  கொடுக்க தவறினால், அந்த இடம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி கொள்ளும் எனவும் அந்த நோட்டீஸில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Categories

Tech |