ரயிலில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற பையை நேர்மையாக ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமையன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்த நிலையில், சிவசுப்பிரமணியம் என்ற பயணி ரயிலில் தனது பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கிடந்த பையை ரயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ராஜலட்சுமி என்பவர் ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி அந்த பெண்ணிற்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியும் பாராட்டுச் சான்றிதழையும் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வழங்கியுள்ளார்.