திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 640 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையானது 1,426ஆக உயர்ந்துள்ளது.