Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் செந்தில் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு…. ஆணையர் அலுவலகத்தில் புகார்…!!

ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது சிலர் நடிகர்கள் நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தி ட்விட்டரில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூராக செய்திகளை பரப்பி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் டுவிட்டரில் தனது பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கபட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் செந்தில் பெயரில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து கருத்து பதிவு செய்யப்பட்ட நிலையில், தேவையில்லாமல் தனது பெயரில் இருக்கும் போலி டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |