Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் பெரும் அதிர்ச்சி… வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக தமிழகத்திற்கு சுமார் 2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கால அரசின் செலவினங்களில் ஊரடங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அரசுக்கு டாஸ்மாக் மதுபான விலையை ஏற்றுவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |