பெரு நாட்டில் உயிர்வாழ உணவுத்தேடி நிலப்பரப்பிற்கு வந்த 6 கடல் சிங்கங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டுள்ளன.
பெருநாட்டின் தலைநகர் லிமா பகுதியின் நிலப்பரப்பில் 6 கடல் சிங்கங்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருப்பதை வனவிலங்கு வனவிலங்கு ஆர்வலர்கள் பார்த்தனர். பின்னர் அவற்றை அப்பகுதியில் இருந்து மீட்டு பராமரித்து பசுபிக் கடற்கரையில் பத்திரமாக விட்டனர்.
கடல் சிங்கங்கள் நிலப்பரப்பிற்கு வந்த காரணம் என்னவென்றால், வெப்பநிலை மாற்றம் காரணமாக பெரு பகுதியில் உள்ள கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகவே கடற்சிங்கங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால் அவையனைத்தும் உயிர் வாழ்வதற்காக இரையை தேடி நிலப்பரப்புக்கு வர ஆரம்பித்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் லிமா பகுதியில் 1, 50,000 – ஆக இருந்த கடற்சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.