Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி – இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு.!!

இன்று மதுரையில் பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

அதேபோல இன்று ஒரே நாளில்  89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்ட 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,595 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் இன்று 9 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.  இன்று 949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7394 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 1999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் 7758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. அதில் சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாவட்டத்தில் அதிக பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதேபோல இன்று மதுரையில் பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

 

Categories

Tech |