இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இதனையடுத்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இளவரசர்களும் குடும்ப உறுப்பினர்களும் அரண்மனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு செய்தியை அறிந்ததும் இங்கிலாந்து மக்களும் உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் குவிந்து வருகின்றனர்.