Categories
உலக செய்திகள்

“பிரான்ஸை விட்டு பிரிய மனசு இல்ல”…. பொதுவாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த மக்கள்….!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு ஒன்றில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்திருக்க பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பிரான்ஸ் நாட்டின் பசுபிக் பிராந்திய பகுதியான நியூ காலிடோனியாவில் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பில் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான மக்கள் பிரான்ஸ் நாட்டின் ஒரு அங்கமாக தொடர வாக்களித்துள்ளனர். ஆனால் பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆவலாக இருக்கும் அமைப்பினர் இந்த பொதுவாக்கெடுப்பு கொரோனா நேரத்தில் நடத்தப்பட்டதால் பெரும்பான்மையான மக்களின் உண்மையான கருத்து வெளிச்சத்திற்கு வராது என்று கூறி வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர்.

அதேபோல் பருவமழை காரணமாக வாக்குகளும் குறைந்த எண்ணிக்கையிலே பதிவாகி இருந்தது. இதற்கிடையே பிரான்சுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 10-ல் 9 பேர் வாக்களித்திருந்தனர்.

Categories

Tech |