இது குறித்து இலியானா கூறுகையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்து மக்கள் அதிகமாக நடிகர்-நடிகைகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் இப்போது படத்தில் நடிக்கிறார்களா இல்லையா இப்போது யாருடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா,தீபிகா படுகோனே ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வந்தனர் என்றனர் இலியானா. சில மாதங்கள் படங்களில் நடிக்கவில்லை ஆனாலும் ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது 10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அதிகமான வெற்றிகளை கண்டுள்ளேன். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்தேன்.

அதன்பிறகு இந்தி சினிமாவில் கால்பதித்தேன். சினிமா துறையில் வெற்றி என்பது மிக முக்கியமாகும். நான் சினிமாவில் இப்போது நடிக்கிறேனோ? இல்லையோ? ஆனால் என் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் பின் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. இதை பார்த்து பெருமையுடன் உட்கார்ந்து இருந்தால் எந்த பயன்இல்லை. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து பயந்து பயந்து நடிக்கிறேன். எல்லா படங்களிலும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று இலியானா கூறியுள்ளார்.