பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை தன் மனைவிக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி சில நாட்களுக்கு முன்பு அரச குடும்பத்திலிருந்து விலகினார். இந்நிலையில் முதல் முறையாக இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் ஒப்ரா வின்ஃப்ரே நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். அந்த நேர்காணல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த நிலையில் அதன் சில பகுதிகள் மட்டும் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
அதில், என் தாய் டயானாவுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை என் மனைவிக்கும் ஏற்பட்டு விடுமோ என்று தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் அரச குடும்பத்தில் வெளியேறினாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த வெளிப்படையான பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.