இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்யா வேலைக்கு செல்லாமல் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சௌந்தர்யாவின் சடலத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.