இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பர்மா காலனி பகுதியில் ரித்திகா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரித்திகா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரித்திகாவை உடனடியாக மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.