டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டுமென்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்கு நகரங்களில் வெடித்த கலவரத்திரிக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹாசன் என்பவரும் , அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் , பெட்ரோல் குண்டுகள் , ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்தே விநியோகிக்கப்பட்டதாக பாஜக ஜனதா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து உள்ள ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா நிர்வாகிகள் கபில் மிஸ்ராவின் நடவடிக்கைதான் கலவரத்திற்கு காரணம் என்று கூறி பதிலுக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதாரங்களுடன் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். எந்தவொரு ஆம் ஆத்மி கட்சி நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு பிரச்சினையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.